Migrant Workers Singapore: வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சிங்கப்பூர் முழுவதும் சுமார் 60,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
மே 18 அன்று, மனிதவள அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய உணவகங்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்த இந்த விநியோகத்தில் 60க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் ஒன்றுகூடி உணவுகளை தயாரித்தன.
லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, SG60 மற்றும் தொழிலாளர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ஆக பெரிய ஒற்றை நாள் உணவு விநியோக ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லிட்டில் இந்தியாவின் பெர்ச் சாலையில் உள்ள 28 தங்கும் விடுதிகள், ஐந்து பொழுதுபோக்கு நிலையங்கள் மற்றும் பல வழிபாட்டுத் தலங்களில் என பல இடங்களில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த விநியோகத்தில் 160க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், சமூக பங்காளிகள் போன்ற பல்வேறு தரப்பினர் விநியோகத்தில் உதவினர்.
இதில் சிறப்பு விருந்தினராக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதில் பேசிய டாக்டர் டான், பிப்ரவரி முதல் திட்டமிட்டு செயல்படுத்திய 60 உணவகங்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
“சிங்கப்பூரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகிய உணர்வை மதிக்கும் நாள் தொழிலாளர் தினம்” என்று அவர் கூறினார்.
“SG60ஐ கொண்டாடும் இந்த தருணத்தில், சிங்கப்பூர் வெற்றிக் கதையில் நமது வெளிநாட்டு ஊழியர்களின் தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளையும் நினைவுக்கூர வேண்டும்” என்றும் சொன்னார்.
சிங்கப்பூரில் வீடுகளைக் கட்டுவதற்கும், உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றவை என்று கூறிய அமைச்சர் டான், இந்தக் கொண்டாட்டம் அவர்களுக்கு ‘நன்றி’ சொல்வதற்கான ஒரு சிறிய ஏற்பாடு என்றார்.

