Last Updated:
ஆபரேஷன் சிந்தூரில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, சமரச பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பியது.
ஆபரேஷன் சிந்தூரில், இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலின் புதிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரஷேன் சிந்து நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் போர் பதற்றம் நிலவியது. இந்திய ராணுவத்தின் பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இதனால், இரு நாட்டு எல்லையோரத்தில் அமைதி திரும்பியது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் மேற்கு கமான்ட் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தெளிவான திட்டமிடல், முறையான பயிற்சி மற்றும் தெளிவாக செயல்படுத்தியதாகவும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டு, நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய கடற்படையும் ஒரு வீடியோவை வெளியிட்டு, தயார் நிலையில் இருப்பதாகவும் அனைத்து அச்சுறுத்தல்களையும் தகர்ப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


