Last Updated:
இன்றைய போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிராக இன்று டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் இந்த சாதனையை ஏற்படுத்தினார் கே.எல். ராகுல். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
அந்த சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை கொண்டுள்ள டெல்லி அணி இன்று முக்கியமான ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்துள்ள டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்துள்ளது. இந்த மேட்சில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் குஜராத் அணியின் ககிசோ ரபாடா வீசிய 6-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார்.
அப்போது அவர் 35 ரன்கள் எடுத்திருந்தபோது 20 ஓவர் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ராகுல் ஏற்படுத்தினார். முன்னதாக இந்த ரெக்கார்டை விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் ஏற்படுத்தியிருந்தார். அதனை வெறும் 224 இன்னிங்ஸ்களில் எடுத்து சாதித்துள்ளார் கே.எல்.ராகுல்.
உலக அளவில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த மூன்றாவது வீரர் என்ற ரெக்கார்டும் கே. எல். ராகுலால் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 213 இன்னிங்ஸ்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயிலும், 218 இன்னிங்ஸ்களில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசமும் வேகமாக 8000 ரன்களை கடந்திருந்தனர்.
இன்றைய போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.
May 18, 2025 10:06 PM IST


