Little India: லிட்டில் இந்தியாவில் ஆடவர் ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் ம*ரணித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று மே 17 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 10 மணியளவில், NO 1, இந்து சாலையில் (Hindoo Road) நடந்ததாக காவல்துறை தெரிவித்ததாக தமிழ் முரசு செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை
அசைவின்றி தரையில் படுத்த நிலையில் கிடந்த அந்த 43 வயதுமிக்க ஆடவர், சம்பவ இடத்திலேயே மரணித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இந்த சம்பவத்தில் சதிச்செயல் ஏதும் நடக்கவில்லை என்பதையும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாகவும், அங்கு சென்று ஆடவரை சோதித்தில் அவரின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறை சொன்னது.
18 வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலி வேலை அனுமதி (Work pass).. ஆடவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்
இது தொடர்பான புகைப்படங்களை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் எடுத்து தமிழ் முரசு தளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இறந்த ஆடவரை பார்க்கும் போது அவர் இந்தியர் அல்லது சீன நாட்டவர் போல தெரியவில்லை என்று அந்த வாசகர் கூறியுள்ளார்.
மேலும், அவர் மலாய்காரர் அல்லது பர்மா நாட்டவர் போல இருந்ததாகவும் அவர் சந்தேகத்துடன் சொல்லப்பட்டுள்ளது.
அவர் சாலையின் ஓரத்தில் படுத்திருந்தபடியே மரணித்திருக்கலாம் என்றும் அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

