Singapore: சிங்கப்பூர் வலைதளவாசிகள் சிலர் தன் சொந்த காசிலேயே சூன்யம் வைத்துக்கொள்வது போல தற்போது சிக்கியுள்ளனர்.
கடந்த 2024 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் மின்-சிகரெட்டுகளின் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை வெளியிட்ட பதினைந்து பேர் அடையாளம் காணப்பட்டனர்.
18 வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலி வேலை அனுமதி (Work pass)..
இந்நிலையில், அந்த 15 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) ஆகியவை கூட்டாக வெள்ளிக்கிழமை (மே 16) தெரிவித்தன.
இவ்வாறான குற்றங்களில் கடந்த 8 மாதங்களில் மட்டும் பத்து பேர் பிடிபட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் / காணொளி
பிடிபட்டவர்கள் டிக்டாக் (TikTok) மற்றும் நேரடி ஒளிபரப்பு தளமான பிகோ (Bigo) ஆகிய தளங்களில் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை பகிர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே காலகட்டத்தில் மின்-சிகரெட்டுகளை பயன்படுத்திய அல்லது வைத்திருந்த குற்றத்திற்காக சுமார் 17,900 க்கும் மேற்பட்டோர் பிடிபட்டுள்ளதாக MOH மற்றும் HSA கூட்டாக தெரிவித்துள்ளன.
அதே போல, மின்-சிகரெட்டுகளை விற்றதாக விற்பனை செய்ததற்காக 60 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அதே கால கட்டத்திற்குள், சிங்கப்பூருக்குள் நுழைந்த 101 பயணிகள் மின்-சிகரெட்களுடன் பிடிபட்டனர், HSA மற்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளின் போது அவர்கள் சிக்கினர்.
மின்-சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது வாங்குவதற்கு அதிகபட்சமாக S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு S$10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்
அதே தவறை மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
சிங்கப்பூரில் அதிகரிக்கும் COVID-19 தொற்று – பொதுமக்களுக்கு MOH வெளியிட்ட முக்கிய அப்டேட்

