உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 109 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர்.
இதனிடையே தெலங்கானா சுற்றுலாத் துறை சார்பில் போட்டியாளர்கள் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

