இதனிடையே, எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில், அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் காலாண்டில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ-போன்களாகவே இருக்கப் போகிறதென ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பை ஆப்பிள் நிறுத்தினால் அந்நிறுவன ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

