Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் காரணமாக சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிப்டி 600 புள்ளிகள் உயர்ந்தது. தங்கம் விலை 1320 ரூபாய் குறைந்தது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த புரிந்துணர்வு காரணமாக சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் இரண்டாயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. தற்போது இரு நாடுகளிடையே சண்டை நிறுத்த புரிந்துணர்வு ஏற்பட்ட நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின.
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டாயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81 ஆயிரத்து 500 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 600 புள்ளிகள் வரை உயர்ந்து 24 ஆயிரத்து 600 புள்ளிகளில் வர்த்தகமானது.
வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் உட்பட அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த புரிந்துணர்வு, அமெரிக்கா – சீனா இடையேயான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஆகியவை காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் மீட்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன. அதேநேரம், தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையானது.
Mumbai,Maharashtra
May 12, 2025 10:42 AM IST
இந்தியா – பாக். போர் நிறுத்தம் எதிரொலி : சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 2000 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி


