கடந்த வாரத்தில் மூன்று முதலை பிடிக்கப்பட்டதை அடுத்து, பத்து பஹாட்டில் உள்ள கம்போங் பாரிட் காண்டோங் குடியிருப்பாளர்கள் தற்போதைய முதலை இனச்சேர்க்கை காலத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலிடன்) இயக்குனர் அமினுதீன் ஜாமின், பெண் முதலைகள் கரைக்கு வந்து கூடு கட்டி தங்கள் முட்டைகளைப் பாதுகாக்கும் போது குறிப்பாக ஆக்ரோஷமாக இருப்பதாக ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது முதலைகளுக்கு இனச்சேர்க்கை காலம் என்று நாங்கள் நம்புகிறோம். பொதுவாக, முதலைகள் முட்டையிடுவதற்கு முன்பு கூடு கட்ட ஆற்றங்கரைகளுக்கு அருகிலுள்ள நிலத்திற்கு வரும். பெண் முதலைகள் மிகவும் ஆக்ரோஷமாக அவற்றின் முட்டைகளைப் பாதுகாக்கின்றன என்று அவர் கூறினார்.
இனச்சேர்க்கை காலம் தொடரும்போது அதிக முதலைகள் தோன்றக்கூடும் என்பதால், விலங்குகளைச் சீண்ட வேண்டாம் என்றும், குறிப்பாக ஆற்றங்கரைகளுக்கு அருகில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். அறியப்பட்ட முதலை வாழ்விடமான சுங்கை பத்து பஹாட்டிற்கு கிராமம் அருகாமையில் இருப்பது இந்த சம்பவங்களுக்கு ஒரு முக்கிய காரணியாக அமினுதீன் கூறினார்.


