Last Updated:
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை 7-ஆம் தேதி நள்ளிரவில் நடத்தியது.
பகல் காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பகல் காமில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை 7-ஆம் தேதி நள்ளிரவில் நடத்தியது. அதைத் தொடர்ந்து மீண்டும் பயங்கரவாதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இது பாகிஸ்தான் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் அதிரடி தாக்குதல் பொருளாதார ரீதியிலும் பாகிஸ்தானுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது .
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் முக்கியமான 5 பேர் யார் என்பது குறித்த விபரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது அவர்கள் பின்வருமாறு-
முதாசர் காடியன் காஸ் – மர்கஸ் தைபா என்ற அமைப்பின் பொறுப்பாளர் இவரது மரணத்திற்கு பாகிஸ்தான் அரசு ராணுவ மரியாதை வழங்கியது. இறுதிச் சடங்கு பாகிஸ்தான் அரசுப் பள்ளியில் நடந்துள்ளது இதில் ராணுவ துணை தளபதி ஹபீஸ் அப்துல் ரவுப் கலந்து கெண்டுள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடைய ஹபிஸ் முகமது ஜமீல் என்பவர் பிரபல பயங்கரவாதி மசூத் அசாரின் நெருங்கிய உணவினர்.
மூன்றாவதாக முகமது யூசுப் அசார் என்பவரும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டுள்ளார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இவர் மவுலானா மசூத் அசாரின் உறவினர் ஆவார். அந்த அமைப்பில் ஆயுதங்களை கையாளுவதில் நிபணத்துவம் பெற்றவர். முன்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் இவருக்கு தொடர்பு உள்ளது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த காலித் என்பவரும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் இவருக்கு தொடர்பு உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தி வருவதில் திறமையானவர். இவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் பைசலாபாத்தின் துணை கமிஷனர் கலந்து கொண்டுள்ளார்.
முகமது கசன் கான் என்பவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ் இ இகமது அமைப்பின் தளபதி அஸ்கர் கான் என்பவரின் மகன். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்ளுக்கு இவருக்கு தொடர்எ உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகள்.. லிஸ்ட்டை வெளியிட்டது இந்திய ராணுவம்


