சிங்கப்பூரில் ஊழியருக்கு இழப்பீடு வழங்க தவறிய நிறுவனத்துக்கு அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தரமாக பாதிப்புக்கு உள்ளான ஊழியருக்கு இழப்பீடு வழங்கத் தவறியதால் சரக்கு அனுப்பும் நிறுவனத்திற்கு S$9,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் லஞ்சம் வழங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு S$15,000 அபராதம்
வேலையிட காயம் இழப்பீட்டுச் சட்டம்
அதாவது, 21 நாட்களுக்குள் அவருக்கு $98,000 க்கும் அதிகமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதை தவறிய AIS குளோபல் ஃபார்வர்டர்ஸ் நிறுவனத்துக்கு வேலையிட காயம் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட அபராதம் விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று, டன்னர்ன் (Dunearn) சாலைக்கு அருகிலுள்ள ஷெல்ஃபோர்ட் சாலையில் உள்ள பிளாட்டில் இருந்து உடற்பயிற்சி இயந்திரத்தை எடுத்துச் செல்லுமாறு ஊழியர் திரு. அப்துல் ஹலீம் மொக்தாருக்கு நிறுவனம் அறிவுறுத்தியது என மனிதவள அமைச்சகத்தின் (MOM) வழக்கறிஞர் ஜஸ்டின் தியா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஊழியருக்கு நிரந்தர பாதிப்பு
அப்போது, இயந்திரத்தின் கைப்பிடி அவரின் நெற்றியில் மோதியதில் காயமடைந்த திரு. அப்துல் ஹலீம் நிரந்தர பாதிப்புக்கு ஆளானார். அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்தோ அவரின் தற்போதைய நிலை குறித்தோ எந்த விவரங்களையும் நீதிமன்றம் வெளியிடவில்லை.
பின்னர் அதே ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மேற்கொண்ட விசாரணைகளில், ஊழியருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான முறையான வேலையிட இழப்பீட்டு காப்பீடு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இழப்பீட்டு மதிப்பீட்டு அறிவிப்பு
அதனை அடுத்து, 2023 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று காயம் தொடர்பான இழப்பீட்டு மதிப்பீட்டு அறிவிப்பு ஒன்று நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது, அதில் இந்த அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திரு. அப்துல் ஹலீமுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
$98,000க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை
அதாவது 2023 ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து 21 நாட்களுக்குள் அந்நிறுவனம் திரு. அப்துல் ஹலீமுக்கு $98,000க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டும் என்பதே மதிப்பீட்டு அறிவிப்பு ஆகும்.
ஆனால், AIS குளோபல் ஃபார்வர்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட நாளுக்குள் திரு. அப்துல் ஹலீமுக்கு தொகையில் எந்தப் பகுதியையும் செலுத்தவில்லை.
இதனால் நிறுவனம் மீது 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில், இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வழிமுறைகள்!

