அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள டென்னசி மாகாணத்தில் குழந்தையை மீட்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அயலகத் தமிழர் நல வாரியத்தின் அமெரிக்க உறுப்பினர் கால்டுவெல் வேள்நம்பி, அட்லாண்டா இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், மிட் சௌத் தமிழ்சங்க உறுப்பினர்கள், அயலகத் தமிழர்களுக்காகச் செயல்பட்டு வரும் REACTION அமைப்பின் பிரதிநிதிகள், குழந்தையின் சித்தி, அபிநயா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த சட்ட போராட்டங்களைக் கடந்து நேற்று (ஏப்ரல் 1), நான்கு வயதாகும் குழந்தை விஸ்ருத் தன் சித்தி மற்றும் பாட்டியுடன் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அபிநயா, “என் அக்காவும் மாமாவும் இறந்த செய்தி எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அவங்களுடைய 17 மாத குழந்தையை வேறொருத்தர் தத்தெடுத்துக்கிட்டாருன்னு கேள்விப்பட்டதும் எங்களால தாங்கவே முடியல.

