ஜேஎஸ்டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையத்தின் மூலம் இயக்கப்படும் 3-ஆவது வடக்கு சரக்கு தளத்தில் அமைந்துள்ள இரண்டு 120 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலக்கரி, சுண்ணாம்புக் கல், ஜிப்சம், ராக் பாஸ்பேட், தாமிரத் தாது போன்ற பொது சரக்குகளைக் கையாள முடியும். இது, 306 மீட்டா் நீளமும், 14.20 மீட்டா் மிதவை ஆழமும் கொண்டுள்ளது. இந்த சரக்கு தளம் 260 மீட்டா் நீளமும், 48 மீட்டா் அகலமும், 95 ஆயிரம் டெட் வெயிட் டன்னேஜ் கொள்ளளவு கொண்ட சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டு, தற்போது இடைக்கால வா்த்தக செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு தயாராக உள்ளது.

