Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தெற்காசிய நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக குடிமக்களுக்கு சிங்கப்பூர் அரசு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
பெகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உள்நாட்டில் பலப்படுத்தி உள்ளது. இந்த அதிரடி தாக்குதலை நினைத்துப் பார்க்க முடியாத பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற தொடங்கியுள்ளது.
இதற்கிடையே வெளிநாட்டு அரசுகள் ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிற்கு தங்களது குடிமக்கள் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிங்கப்பூர் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை செய்து கொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்க வேண்டும். உள்ளூரில் என்ன நடக்கிறது என்பது குறித்த செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும். வெளியறவு அமைச்சக இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் சிங்கப்பூர் குடிமக்கள் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டிராவல் ஏஜென்சிக்கள் இதுகுறித்து கவனத்துடன் நடக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தெற்காசிய நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. குடிமக்களுக்கு சிங்கப்பூர் அரசு முக்கிய அறிவுறுத்தல்


