ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஈரான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமானி 2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவரது உடல் கெர்மான் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
அப்போது கல்லறைக்கு அருகே அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈரானில் நிகழ்ந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
