இது தொடா்பாக செக்டா்-113 காவல் நிலைய பொறுப்பாளா் கிருஷ்ண கோபால் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: சோா்கா புஷ்தா பகுதியில் உள்ள விஷ்ணு நகா் காலனியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராகவ் (14) என்ற மாணவா், அவரது பக்கத்து வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். உடற்கூராய்வில் கொலைக்கான எந்த அறிகுறிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

