மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. ‘ஸஹஸ்ர சூடாமணி’ திட்டத்தின் கீழ், புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞா்களை கல்வியாளா்களாக நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறிக் கிடக்கும் கையெழுத்துப் பிரதிகளை சேகரிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசாரம், அரசின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.

