Last Updated:
பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா’ போட்டிகளை தொடங்கி வைத்து, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டினார். 2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடத்த முயற்சி, விளையாட்டு நிதி 4 ஆயிரம் கோடி.
‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வெகுவாகப் பாராட்டினார்.
பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் 7வது ’கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். பின்னர், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துப் பேசிய அவர், 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.
நாட்டில் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரித்து 4 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடுவதாக பிரதமர் பாராட்டினார். இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிக்குப் பின்னால் கடினமான உழைப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
#WATCH | PM Modi virtually addresses the inauguration event of Khelo India Youth Games in Bihar’s Patna.
PM Modi says, “We all have seen the outstanding performance of the son of Bihar, Vaibhav Suryavanshi, in IPL. Vaiabhav has created such a big record at this young age. Behind… pic.twitter.com/XnBSDoIyvl— ANI (@ANI) May 4, 2025
மேலும் இதன்மூலம் ஒருவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் மலர்வார் என தெரிவதாக பிரதமர் மோடி கூறினார்.


