• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடன் வசூலிக்கும் முகவர் உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வரலாமா…? அப்படி வந்தால் என்ன செய்ய முடியும்? அல்லது செய்யக்கூடாது… விரிவான விவரம் இதோ!…

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
கடன் வசூலிக்கும் முகவர் உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வரலாமா…? அப்படி வந்தால் என்ன செய்ய முடியும்? அல்லது செய்யக்கூடாது… விரிவான விவரம் இதோ!…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முறையான கடன் வசூலிக்கும் முயற்சிகளைத் தொடர அனுமதிக்கும் அதே வேளையில், கடன் வாங்கியவர்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள்: ரிசர்வ் வங்கியின் நியாயமான நடைமுறைகள் குறியீட்டின்படி, கடன் வசூலிக்கும் முகவர்கள் கடன் வாங்கியவர்களை நேரில் சந்தித்து நிலுவைத் தொகையை வசூலிக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் தான் செய்ய வேண்டும்:

அனுமதிக்கப்பட்ட நேரங்கள்: முகவர்கள் காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவர்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ முடியும். கடன் வாங்கியவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்த நேரத்தை தாண்டிய வருகைகள் துன்புறுத்தலாகக் கருதப்படும்.

மரியாதைக்குரிய நடத்தை: கடன் வசூலிக்கும் பணியாளர்கள் நாகரிகத்தைப் பேண வேண்டும். அச்சுறுத்தல்கள் அல்லது தவறான மொழியைத் தவிர்க்க வேண்டும். மேலும், பலவந்தம் அல்லது வற்புறுத்தலைப் பயன்படுத்தக்கூடாது.

பொது இடங்களில் அவமானப்படுத்தக் கூடாது: முகவர்கள் தங்கள் அலுவலகத்திலோ அல்லது அண்டை வீட்டாரின் முன்னிலையிலோ கடன் வாங்கியவர்களைத் துன்புறுத்தவோ அல்லது கடன் விவரங்களை வெளியாட்களுக்கு வெளிப்படுத்தவோ கூடாது.

அடையாளம் அவசியம்: கடன் வசூலிக்கும் முகவர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அடையாள அட்டைகள் மற்றும் அங்கீகார கடிதங்களைக் காட்ட வேண்டும்.

உங்கள் பணியிடத்திற்கு வரலாமா?

வரலாம்; ஆனால், அவர்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால் மட்டுமே வர வேண்டும். மேலும், அவர்கள் மேற்கூறிய அதே மரியாதைக்குரிய நடத்தை விதிகளைப் பின்பற்ற வேண்டும். உங்களை அவமானப்படுத்தவோ அல்லது உங்கள் பிம்பத்தை சேதப்படுத்தவோ கூடாது. கடனாளிகளை வேறு எந்த வகையிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் மட்டுமே பணிபுரியும் இடத்திற்கு முகவர்கள் செல்ல வேண்டும்.

உங்கள் தனியுரிமை பாதிக்கப்படுவதாகவோ அல்லது உங்கள் கண்ணியம் பாதிக்கப்படுவதாகவோ நீங்கள் கருதினால், கடன் வழங்கிய வங்கிகளிடம் புகார் அளிக்கலாம். அதில் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளரிடமும் புகார் அளிக்கலாம்.

கடன் வாங்குபவர்களுக்கும் ரிசர்வ் வங்கி மற்றும் சட்டங்களின் கீழ் தெளிவான உரிமைகள் உள்ளன:

கண்ணியத்திற்கான உரிமை: நீங்கள் பணம் செலுத்தத் தவறிவிட்டீர்கள் என்பதற்காக உங்களை அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ முடியாது.

தனியுரிமைக்கான உரிமை: உங்கள் கடன் குறித்து யாருக்கும், உங்கள் அண்டை வீட்டாருக்கு அல்லது சக ஊழியர்களுக்கு கூட முகவர்கள் அறிவிக்கக்கூடாது.

புகார் அளிக்கும் உரிமை: கடன் வசூலிக்கும் முகவர் தவறான முறையில் நடந்து கொண்டால், நீங்கள் வங்கியில் புகார் செய்யலாம். ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளரை அணுகலாம் அல்லது தீவிர சூழ்நிலைகளில் காவல்துறையில் புகார் அளிக்கலாம்.

உச்சநீதிமன்றமும் இந்தியாவின் பல உயர்நீதிமன்றங்களும் துன்புறுத்தலான கடன் வசூலுக்கு எதிராகவும், கடன் வாங்குபவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும் தீர்ப்புகள் வழங்கியுள்ளன என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

First Published :

May 04, 2025 12:05 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

கடன் வசூலிக்கும் முகவர் உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வரலாமா…? அப்படி வந்தால் என்ன செய்ய முடியும்? அல்லது செய்யக்கூடாது… விரிவான விவரம் இதோ!…

Read More

Previous Post

“நான் இதை செய்திருக்கலாம்..” – ஆர்சிபியுடனான தோல்வியையடுத்து தோனி சொன்ன கருத்து

Next Post

துனிசியா முன்னாள் பிரதமருக்கு 34 ஆண்டுகள் சிறை | Makkal Osai

Next Post
துனிசியா முன்னாள் பிரதமருக்கு 34 ஆண்டுகள் சிறை | Makkal Osai

துனிசியா முன்னாள் பிரதமருக்கு 34 ஆண்டுகள் சிறை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin