• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகம்’ – சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் தீவிர சோதனை | Chennai-Colombo flight searched in Sri Lanka for suspect wanted in India

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
‘பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகம்’ – சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் தீவிர சோதனை | Chennai-Colombo flight searched in Sri Lanka for suspect wanted in India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: சென்னையில் இருந்து இலங்கைக்குச் சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேடப்படும் பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்புவில் அந்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் சென்னையில் இருந்து இன்று காலை 10.26 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், காஷ்மீரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு 6 பயங்கரவாதிகள பயணம் செய்கின்றனர். அவர்களிடம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பகல் 11.59 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு படையினர், அதிரடி படையினர், விமானத்தை சுற்றி வளைத்து கொண்டு தீவிர சோதனைகள் நடத்தினர்.

பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை நடத்தி, அவர்களின் விவரங்களை சேகரித்தனர். சோதனை முடிவில், பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்பது உறுதியானது. இந்த மிரட்டல் மின்னஞ்சல், வழக்கம் போல் சென்னை விமான நிலையத்துக்கு வரும் மின்னஞ்சல் என்பது தெரியவந்தது. இதனால் சென்னை விமான நிலையத்திலும், கொழும்பு விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல் : 47 பேர் படுகாயம்

Next Post

IPL 2025 : சென்னைக்கு எதிரான மேட்ச்சில் 5 ரிக்கார்டுகள் ஏற்படுத்த வாய்ப்பு.. சாதிப்பாரா விராட் கோலி?

Next Post
IPL 2025 : சென்னைக்கு எதிரான மேட்ச்சில் 5 ரிக்கார்டுகள் ஏற்படுத்த வாய்ப்பு.. சாதிப்பாரா விராட் கோலி?

IPL 2025 : சென்னைக்கு எதிரான மேட்ச்சில் 5 ரிக்கார்டுகள் ஏற்படுத்த வாய்ப்பு.. சாதிப்பாரா விராட் கோலி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin