பாகிஸ்தான் இராணுவம், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டிய பகுதிகளில் (LoC) ஏப்ரல் 27-28 தேதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறியதாகவும் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக கடந்த புதன்கிழமை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பஹல்காமில் நடந்த 26 பேரின் மரணத்துக்கு காரணமாக அமைந்த தீவிரவாத தாக்குதல் பற்றி உரையாடினார்.
அதன்பிறகான எக்ஸ்தள பதிவில், குற்றவாளிகள், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மற்றும் திட்டம் தீட்டுபவர்கள் அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனப் பதிவிட்டார்.

