Last Updated:
உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா சர்வதேச அளவில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் ஏழாவது நாடாக உள்ளது.
முந்தைய ஆண்டுகளை விடவும் தற்போது ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிக அளவு வாங்கி குவித்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி ஏன் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
அட்சய திருதியை நன் நாளை முன்னிட்டு இந்தியாவில் நேற்று தங்கத்தின் விற்பனை வழக்கத்தை விடவும் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் விலையை கவனத்தில் கொள்ளாமல் குறைந்தது ஒரு கிராம் தங்கமாவது வாங்கி சென்றனர். இதனால் நேற்றைய தினம் தங்க நகை கடைகளில் கூட்டம் அதிகம் இருப்பதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்ந்த போதிலும் மத்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிகம் வாங்க தொடங்கியுள்ளது. 2024-25 நிதி ஆண்டில் மட்டும் 57.5 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா சர்வதேச அளவில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் ஏழாவது நாடாக உள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 10-ஆம் இடத்தில் இருந்தது. தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பண வீக்கத்தை நிர்வகிப்பது, ஒட்டுமொத்த பொருளாதார நிலை தன்மைகளுக்காக ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிக அதிகமாக தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் டாலர் நிலையற்ற தன்மையில் இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக ரிசர்வ் வங்கி கருதுகிறது.
இதேபோன்று மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகம் இருப்பு வைத்திருப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. உலகளாவிய பொருளாதார நிச்சயம் அற்ற தன்மை தற்போது அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் அந்நிய செலாவணி துறையை பன்முகப்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தற்போது சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் அது பாதுகாப்பான முதலீடாக எதிர்காலத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த 2022 செப்டம்பர் முதல் மத்திய ரிசர்வ் வங்கி 214 டன் அளவு தங்கத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் நிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கும் மத்தியில் இந்தியாவில் மத்திய அரசு வங்கியில் தங்கம் அதிகம் ஸ்டாக் வைத்திருப்பது பொருளாதாரத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. தங்கத்தின் அளவு இந்தியாவிடம் அதிகமாக இருக்கும் போது பண பரிமாற்றத்தில் டாலருக்கு பதிலாக யுபிஐ தளத்தை அதிகம் பயன்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தும் என்றும் கூறப்படுகிறது.
விலையேற்றத்துக்கு மத்தியில் தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி.. என்ன காரணம் தெரியுமா?


