Last Updated:
2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இன்று ஏப்ரல் 30, 2025 அன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ‘ஹிட்மேன்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ரோஹித், தனது அற்புதமான பேட்டிங் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்.
அவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவரது வாழ்க்கை முறை அவரது கடின உழைப்பு மற்றும் வெற்றியின் கதையைச் சொல்கிறது. ரோஹித் சர்மாவின் சம்பளம் மற்றும் அவரது கல்வி தகுதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோஹித் சர்மாவுக்கு பல வருமான வழிகள் உள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ரோஹித் சர்மாவை ஏ+ தரத்தில் வைத்துள்ளது. இதிலிருந்து அவருக்கு ஆண்டுதோறும் ரூ.7 கோடி வருமானம் கிடைக்கிறது.
இது தவிர, ஒவ்வொரு போட்டியையும் விளையாடுவதற்கு தனி கட்டணம் பெறப்படுகிறது. இதில் டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் மற்றும் டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் அடங்கும். இதன் மூலம் ரோஹித் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
ரோஹித் சர்மாவின் முழுப் பெயர் ரோஹித் குருநாத் சர்மா. அவர் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஏப்ரல் 30, 1987 அன்று பிறந்தார். அவரது தாயார் பெயர் பூர்ணிமா சர்மா, தந்தை பெயர் குருநாத் சர்மா. ரோஹித் சர்மா தனது பள்ளிப் படிப்பை வேளாங்கண்ணி உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மும்பையில் உள்ள சுவாமி விவேகானந்தா சர்வதேச பள்ளி & ஜூனியர் கல்லூரியிலும் பயின்றார்.
அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பிஸியாக இருந்ததால் மேற்கொண்டு படிப்பை முடிக்க முடியவில்லை.
ரோஹித் ஜூன் 2007 இல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் அறிமுகமானார் அறிமுகமானார். அதே ஆண்டில், அவர் 2007 டி-20 உலகக் கோப்பையிலும் பங்கேற்றார். அதில் இந்தியா ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது.
2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
April 30, 2025 7:10 PM IST


