Last Updated:
பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 49 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை அணி 190 ரன்கள் குவித்துள்ளது.
சாம் கரன் அதிரடியாக 47 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 88 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். நீண்ட இடைவேளைக்கு பிறகும் சென்னை அணி அதிரடியாக 190 ரன்கள் குவித்துள்ளது. பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். ஷேக் ரஷீத் 11 ரன்னிலும், மாத்ரே 7 ரன்னியில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர்களை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 17 ரன்னில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கரன் மற்றும் டெவல்டு ப்ரூவிஸ் இணை பஞ்சாப் பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கியது.
இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ப்ரூவிஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, சிவம் தூபே 6 ரன்னிலும், தோனி 11 ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த சாம் கரன் அரைசதம் கடந்தார்.
47 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு சிக்சர், 9 பவுண்டரியுடன் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன்கள் குவித்துள்ளது. 19 ஆவது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் கடைசி 3 பந்துகளில் விக்கெட்டை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்
April 30, 2025 9:45 PM IST


