வேலையில் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்ட பணிப்பெண் ஒருவர், தனது பராமரிப்பின்கீழ் இருந்த 90 வயதுடைய மூதாட்டியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டிமென்ஷியா என்னும் நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் பணிப்பெண் தன் வீரத்தை காட்டியுள்ளார்.
பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளை; இரு இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு
39 வயதான கியால் கியால் துன் என்ற அந்த பணிப்பெண் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர், ஜனவரி 3 ஆம் தேதி அன்று மூதாட்டியை மீண்டும் மீண்டும் அவர் தாக்கியதாகவும், அதிலும் குறிப்பாக குரல்வளையை நெரித்தும், கடித்தும் அவரை துன்புறுத்தியுள்ளார்.
மூதாட்டிக்கு விலா எலும்பில் பாதிப்பு மற்றும் முகம், கைகால்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் பணிப்பெண் தான் அவற்றிற்கு காரணமா என்பதை மருத்துவரால் உறுதியாகக் கூற முடியவில்லை.
மூதாட்டியைத் தாக்கியதாக, நேற்று ஏப்ரல் 29 அன்று மூன்று குற்றச்சாட்டுகளுக்கு கியால் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கியால், மூதாட்டியின் 32 வயது பேரன் ஒருவரால் வேலைக்கு எடுக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் அவர் வேறொரு இடத்தில் வசித்து வந்துள்ளார்.
மூதாட்டியின் வீட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வேலை செய்யத் தொடங்கினார், அவரின் முக்கியப் பணிகளில் மூதாட்டி மற்றும் அவரின் கணவர் இருவரையும் கவனித்துக்கொள்வதும் அடங்கும்.
இந்த சம்பவம், அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதாக சொல்லப்பட்டுள்ளது.
அதை கண்ட பேரன் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மூதாட்டி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரியில் S$12.9 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய இருவர்

