மேலும் அட்சய திரிதியை நாள் பல ஆன்மிக சிறப்புக்களைக் கொண்ட நாளாகும். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் எல்லோருக்கும் அதற்கு வசதி கிடையாது. அதனால் இந்த நாளில் அரிசி, கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் (சாதம்) தானம் செய்யலாம். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தயிர் சாதம் கூட தானம் செய்யலாம். இதனால் நம் செல்வ வளம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.


