இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் முக்கிய உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல்கள், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

