Last Updated:
கார்டினல் ரேவின் தலைமையில் போப் பிரான்சிஸின் இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில் அவருக்கு புகழாரம் சூட்டி பிரான்சிஸ் செய்த நன்மைகளை பகிர்ந்தார்.
மக்களுடன் நெருங்கி பழகுபவராக போப் பிரான்சிஸ் இருந்தார் என அவரது இறுதி சடங்கின் போது கார்டினல் ஜியோவானி பட்டிஸ்டா ரே புகழாரம் சூட்டினார்.
வாடிகனின் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸின் உடல் இறுதிச்சடங்கிற்காக வைக்கப்பட்டது. போப் பிரான்சிஸின் இறுதி சடங்குகள் கார்டினல் ரேவின் தலைமையில் நடந்தது. இதில் உலக தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் மத்தியில் பாலங்களை கட்டுங்கள், சுவர்களை அல்ல என்ற போப்பின் வரிகளை கார்டினல் கூறினார். டிரம்ப் மீதான விமர்சனமாக இதனை போப் முன்னர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க | தேவசகாயம் பிள்ளையை புனிதர் ஆக்கிய போப்… கன்னியாகுமரிக்கு போப் ஆண்டவர் செய்த செயல்…
மேலும், மக்களின் மனதை நேரடியாக தொட்டவர் போப் பிரான்சிஸ் என்றும் கார்டினல் புகழாரம் கூறினார். மக்களுடன் இருந்த போப்-ஆக தான் அவர் நினைவுகூறப்படுவார் என்றும் அவர் உரையாற்றினார். தற்கால சவால்களை நன்கு அறிந்தவராக போப் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் புலம்பெயர்ந்தவர்கள் மீது அக்கறை கொண்டவராகவும், போர்களை நிறுத்தவும், காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியவராக போப் இருந்தார் எனவும் கார்டினல் பேசினார். போப் பிரான்சிஸின் கருத்துக்கள் அவருடன் முடிந்துவிட கூடாது என்றும் கார்டினல் ரே தனது உரையில் குறிப்பிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 27, 2025 8:49 AM IST


