Last Updated:
Catholic Church | ஆயர்கள், குருமார்கள், இறைமக்கள் என்று அமைக்கப்பட்டு கத்தோலிக்க மறைமாவட்டத் திருச்சபை செயல்பட்டு வருகிறது.
உலகில் உள்ள பல்வேறு மதங்களில் மிகவும் முக்கியமான கிறிஸ்தவ மதத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக போப் ஆண்டவர் அறியப்படுகிறார். பல்வேறு நாடுகளில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபைகள் பல்வேறு மலை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு ஆயர்களின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த கத்தோலிக்க மறை மாவட்டங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து விவரிக்கிறார் தேவசகாய மவுண்ட் கத்தோலிக்க திருச்சபையின் பங்குத் தந்தை லியோன் டென்சன், “இத்தாலியின் ரோமைப் பொறுத்தவரை அங்கு போப் ஆண்டவர் இருப்பார். அவரின் கீழ் கர்த்தினார்கள் ஆயர்கள் இருப்பார்கள்.
இதையும் படிங்க: அடுத்த போப் ஆண்டவர் யார்… புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை என்ன..?
இதில் போப் ஆண்டவரின் எண்ணங்கள் இயேசு கிறிஸ்துவின் விருப்பமாக இருக்கும், அதனைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மறை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆயர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. இதில் ஆயர்கள், குருமார்கள், இறைமக்கள் என்று அமைக்கப்பட்டு கத்தோலிக்க மறைமாவட்டத் திருச்சபை செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களும் அந்தப் பகுதி மக்களின் களத் தேவைகளை ஆராய்ந்து வருவர். அதேபோன்று ரோமில் கொடுக்கப்படும் விழுமியங்கள் மறக்கப்படுவதில்லை, மறைக்கப்படுவதில்லை. அதனை ஒவ்வொரு திருச்சபைக்கும் தேவைக்கேற்ப அதன் சூழலுக்கு ஏற்ப பகிர்ந்து இழைத்து மக்கள் வாழ்வு பெற என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 26, 2025 2:52 PM IST
Catholic Church: ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…

