Last Updated:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மொத்த பங்கு மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் முழுநேர இயக்குநராக அனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 1ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மொத்த பங்கு மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 2025 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான அதன் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, வருடாந்திர ஒருங்கிணைந்த வருவாய் 7.1% உயர்ந்து 10,71,174 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீசின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். 2023 முதல் இயக்குநராக இருந்த நிலையில் தற்போது முழுநேர இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் 1ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என அரவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2020 முதல் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், மே 2022 முதல் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜூன் 2021 முதல் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி உள்ளிட்ட ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் வாரியங்களிலும் அனந்த் அம்பானி பணியாற்றுகிறார். செப்டம்பர் 2022 முதல் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அனந்த் அம்பானி, விலங்குகள் நலனிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர், மேலும் ஆபத்தில் உள்ள விலங்குகளை மீட்டு மறுவாழ்வு கொடுப்பதில் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 26, 2025 12:15 PM IST


