Last Updated:
கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது.
கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார்.
இதனைத் தொடர்ந்து, போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்ட போப் உடல், கடந்த புதன் கிழமை வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதையொட்டி, புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த போப் உடல் சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டது.
புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ள இறுதிச்சடங்குகளுக்கு பின், புனித மேரி மேஜர் பேராலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் அடக்க நிகழ்வு 15 மொழிகளில் நேரலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் நடைபெறவுள்ள உடல் அடக்க நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதுவரை 54 நாடுகளின் தலைவர்கள் உட்பட 164 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
April 26, 2025 6:38 AM IST
போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்.. 15 மொழிகளில் நேரலை.. இந்தியாவிலிருந்து பங்கேற்கப்போவது யார்..?


