மூத்த குடிமக்கள் விரைவில் தங்கள் வருமான வரிக் கணக்குகளை ஆன்லைனில் தாக்கல் செய்ய முடியும். வருமான வரித்துறையானது வயது, வருமானம் மற்றும் பிற காரணங்களின் அடிப்படையில் பல விலக்குகளை வழங்குகிறது. இது வரி செலுத்தும் மூத்த குடிமக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.
வருமான வரித்துறை 60 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளையும், பல்வேறு ஏற்பாடுகளையும் வழங்கியுள்ளது. அதாவது 60 வயது முதல் 80 வயதுக்குக் குறைவான நபர்கள் வருமான வரித் துறையால் ‘சீனியர் சிட்டிசன்கள்’ பிரிவின் கீழ் வருகிறார்கள். அதே சமயம், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ‘சூப்பர் சீனியர் சிட்டிசன்கள்’ எனப்படும் சிறப்புப் பிரிவின் கீழ் வருகிறார்கள்.
மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடிகளா?
சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.3,00,000 வரை விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு (80 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ரூ.5,00,000 வரை விலக்கு அளிக்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன் இல்லாதவர்களுக்கு ரூ.2,50,000 வரை விலக்கு அளிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் எந்த படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்?
சம்பளம், வாடகை வருமானம், ஓய்வூதியம் அல்லது வட்டி ஆகியவற்றில் இருந்து ரூ.50 லட்சத்திற்கும் குறைவான மொத்த வருமானம் உள்ள குடியிருப்பாளர்களுக்கான ITR-1 (SAHAJ என்றும் அழைக்கப்படுகிறது)-ஐ பலர் பயன்படுத்த முடியும். ITR-2 மூத்த குடிமகனின் வருமானத்தில் பங்குகள் அல்லது பரஸ்பர நிதிகள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் இருந்தால், அவர் ITR-2 படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
இதையும் படிக்க: பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… ரயில்களிலும் வந்தாச்சு ஏடிஎம் வசதி…!
இந்தப் படிவம் வெளிநாட்டில் சொத்துக்கள் அல்லது வருமானம் உள்ளவர்களுக்கும் பொருந்தும். ITR-3 ஒரு மூத்த குடிமகன் தொழிலில் இருந்து வருமானம் ஈட்டினால், ITR-3 அவருக்கு ஏற்றது. இது தவிர, 44AD மற்றும் 44ADA பிரிவுகளின் கீழ் வரி விதிப்பைத் தேர்வு செய்தால், ITR-4 படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தாலும் சரி அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, உங்கள் வருமான வரியை தாக்கல் செய்வதற்கு முன்பு உங்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்துவது முக்கியமாகும்.
இதையும் படிக்க: “இந்தியாவில் 2 ஆண்டுகளில் 28,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது…” – வெளியான அதிர்ச்சி தகவல்
e-பே டேக்ஸ் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
பதிவு செய்த யூசர்களுக்கு:
- வருமான வரி e-ஃபில்லிங் போர்ட்டலில் லாகின் செய்யவும்.
- ‘e-File’ டேப்-க்கு சென்று ‘e-பே டேக்ஸ்’ என்பதை செலக்ட் செய்யவும்.
- ‘நியூ பேமெண்ட்’ என்பதைக் கிளிக் செய்து, ஆண்டை (2025-26) தேர்வு செய்யவும்.
- செல்ஃப் அசஸ்மென்ட், அட்வான்ஸ் டேக்ஸ் அல்லது பிற ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கட்டண வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- உங்கள் PAN, முகவரி மற்றும் வரி உள்ளிட்ட விவரங்களை என்டர் செய்யவும்.
- கட்டண முறையைத் தேர்வு செய்யவும் (நெட் பேங்கிங், டெபிட் கார்டு, UPI, NEFT/RTGS அல்லது பேமெண்ட் கேட்வே).
- உங்கள் தகவல்களை ரிவ்யூ செய்து சப்மிட் செய்யவும்.
- பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் ரெகார்ட்களுக்கான சலான் ரசீதை டவுன்லோட் செய்யவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 25, 2025 1:13 PM IST

