பின்னர் திடீரென கையில் ஆயுதங்களுடன் அந்த மூன்று இடங்களை அடைந்து சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பெண்கள், குழந்தைகளை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் சுட்டுக்கொன்றுள்ளனர்.
சரியாக பிற்பகல் 1.50 மணிக்கு துப்பாக்கிச் சூடு தொடங்கி 10 நிமிடம் நடைபெற்றுள்ளதாகவும் 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த கொடூரத் தாக்குதலை பதிவு செய்ய தங்கள் உடையில் பயங்கரவாதிகள் கேமரா வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர், பயங்கரவாதிகள் அடர்ந்த மரங்கள் இருக்கும் பகுதியை நோக்கி ஓடிவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மொபைல் நெட்ஒர்க் குறைந்த அளவிலேயே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல அங்கிருந்து 3 கிமீ தொலைவில்தான் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது.
இதுதொடர்பான விடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் 2 பேர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

