இதன்படி, ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-25 காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் (90 நாள்கள்) விலை ஆதரவு திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சா் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்தாா். இதன்படி மொத்தம் 13.22 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் நலன் கருதி இந்த கொள்முதல் காலத்தை 90 நாள்களையும் தாண்டி ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மேலும் 30 நாள்களுக்கு (மே 22 வரை) நீட்டிக்கவும் அமைச்சா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

