• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குடும்பத் தொழிலை கவனிப்பதற்காக உயர்கல்வி படிப்பை கைவிட்டவர்; மாபெரும் ஐடி நிறுவனத்தை உருவாக்கியவர்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
குடும்பத் தொழிலை கவனிப்பதற்காக உயர்கல்வி படிப்பை கைவிட்டவர்; மாபெரும் ஐடி நிறுவனத்தை உருவாக்கியவர்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனிப்பட்ட வாழ்க்கை

அசிம் ஹாஷிம் பிரேம்ஜி ஜூலை 24, 1945 அன்று மும்பையில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். 1940-களில் பர்மாவில் (இப்போது மியான்மர்) அரிசி வர்த்தகத்தில் சிறந்து விளங்கியதற்காக “பர்மாவின் அரிசி மன்னர்” என்று அழைக்கப்பட்ட முகமது ஹாஷிம் பிரேம்ஜி இவரது தந்தையாவார். பிரேம்ஜி 1966-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, தொலைதூரக் கல்வி முறையில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலை அறிவியல் பட்டத்தை 1999-ம் ஆண்டு முடித்தார். இவரது மனைவி யாஸ்மீன். இந்த தம்பதியருக்கு ரிஷாத் மற்றும் தாரிக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தொழில் மற்றும் வேலை

தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தன்னுடைய 21 வயதில் வெஸ்டர்ன் இந்தியன் வெஜிடபிள் புராடக்ட்ஸ் லிமிட்டடை கையகப்படுத்தினார் பிரேம்ஜி. அப்போது அந்த நிறுவனம் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், பேக்கரி கொழுப்புகள், கழிப்பறைப் பொருட்கள், லைட்டிங் மற்றும் ஹைட்ராலிக் சிலிண்டர்கள் ஆகியவற்றில் வர்த்தகம் செய்து வந்தது.

1980களில், நிறுவனத்தின் கவனத்தை ஐடி சேவைகளுக்கு மாற்றினார் பிரேம்ஜி. இவரது வழிகாட்டுதலின் கீழ், மென்பொருள் மேம்பாடு, ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக விப்ரோ மாறியது. பிரேம்ஜி 1966 முதல் 2019 வரை விப்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்தார். தற்போது அதன் நிறுவனர் தலைவராகவும், நிர்வாகமற்ற உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

இதையும் படிக்க: UPI பேமென்ட் செய்ய RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

தொண்டு மற்றும் விருதுகள்

பிரேம்ஜி பல்வேறு துறைகளில் தனது தொண்டு முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர். அவர் நிறுவிய மிக முக்கியமான அமைப்புகளில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். 2013-ம் ஆண்டில், பிரேம்ஜி தனது செல்வத்தில் குறைந்தது பாதியையாவது நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தார்.

“நிறைய செல்வத்தைப் பெற பாக்கியம் பெற்ற நாம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும்” என்று ஒருமுறை பிரேம்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜிக்கு 2005-ம் ஆண்டு பத்ம பூஷண் மற்றும் 2011-ல் பத்ம விபூஷண் உட்பட பல முக்கிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரான்சின் மிக உயர்ந்த சிவில் விருதானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

சொத்து மதிப்பு

பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 11.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது. இது அவரை இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக தரவரிசைப்படுத்துகிறது.

First Published :

April 23, 2025 4:58 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

குடும்பத் தொழிலை கவனிப்பதற்காக உயர்கல்வி படிப்பை கைவிட்டவர்; மாபெரும் ஐடி நிறுவனத்தை உருவாக்கியவர்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

Read More

Previous Post

கொல்கத்தா அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி: சொல்கிறார் கேப்டன் ரஹானே | openers did not play well says kkr Captain Rahane ipl 2025

Next Post

நஜிப்பின் 1MDB விசாரணையில் முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் சாட்சியமளிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது | Makkal Osai

Next Post
நஜிப்பின் 1MDB விசாரணையில் முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் சாட்சியமளிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது | Makkal Osai

நஜிப்பின் 1MDB விசாரணையில் முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் சாட்சியமளிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin