Last Updated:
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்கா விசாக்கள் 30% குறைந்துள்ளன. பிப்ரவரி மாதத்தில் 411 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்திலேயே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு வெகுவாகக் குறைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி உள்ளார். அதன்படி டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, பிப்ரவரியில் அமெரிக்காவால் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளன.
குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 590 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் 411 இந்திய மாணவர்களுக்கு மட்டும் விசா வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதில் கடந்த மார்ச் இறுதியில் இருந்து தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா அல்லது சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50 விழுக்காட்டினர் இந்திய மாணவர்கள் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 22, 2025 1:21 PM IST
US Student Visa | இந்திய மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கை குறைப்பு… பதவியேற்ற முதல் மாதத்திலேயே ஷாக் கொடுத்த டிரம்ப்


