• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிர்வாகத்தில் அத்துமீறி நுழைவதாக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து | Supreme Court Justice P R Kawai says facing charges of trespassing into the administration

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நிர்வாகத்தில் அத்துமீறி நுழைவதாக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து | Supreme Court Justice P R Kawai says facing charges of trespassing into the administration
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரும் மனு தொடர்பான விசாரணையின் போது, “ நிர்வாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தையும், அதன் நீதிபதிகளையும் பாஜகவை சேர்ந்த சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர்.கவாயின் இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் காலக்கெடு விதித்தது. அதேபோன்று, மத்திய அரசு அமல்படுத்திய வக்பு திருத்த சட்டத்தில் சில பிரிவுகளை நிறுத்தி வைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு, குடியரசு துணைத் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்களும் உச்சநீதிமன்றத்தை கடுமையாக வார்த்தைகளால் விமர்சித்தனர்.

இந்த நிலையில், வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரியும், அமைதியை மீட்டெடுக்க துணை ராணுவப் படைகளை அனுப்பி வைக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதி பி.ஆர். கவாய் கூறுகையில், “ இதைத் திணிக்க குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இதுபோலவே நாங்கள் நிர்வாக அதிகாரத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்”: என்றார். இதையடுத்து, மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயின் இந்த கருத்து, நீதித்துறைக்கு எதிராக ஆளும் கட்சித் தலைவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை; வெளியான அறிவிப்பு

Next Post

‘பிளே ஆஃப் சுற்றுக்கு முயற்சிப்போம்.. முடியாவிட்டால் அடுத்த ஆண்டு வலுவாக திரும்புவோம்’ – சிஎஸ்கே கேப்டன் தோனி | We try for play off if not will come back stronger next season CSK captain Dhoni

Next Post
‘பிளே ஆஃப் சுற்றுக்கு முயற்சிப்போம்.. முடியாவிட்டால் அடுத்த ஆண்டு வலுவாக திரும்புவோம்’ – சிஎஸ்கே கேப்டன் தோனி | We try for play off if not will come back stronger next season CSK captain Dhoni

‘பிளே ஆஃப் சுற்றுக்கு முயற்சிப்போம்.. முடியாவிட்டால் அடுத்த ஆண்டு வலுவாக திரும்புவோம்’ - சிஎஸ்கே கேப்டன் தோனி | We try for play off if not will come back stronger next season CSK captain Dhoni

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin