Foreign Workers: ஜூரோங் தீவில் சாலையை கடக்க முயன்ற வெளிநாட்டு ஊழியர்களை அடித்து தூக்கும் வேகத்தில் சென்ற வேன் தொடர்பான காணொளி இணையத்தில் பரவியது.
ஜெட் வேகத்தில் சென்ற அந்த வேன் ஊழியர்கள் கூட்டத்தை கிட்டத்தட்ட மோதியது என்றே கூறலாம் அந்த அளவிற்கு நூலிழையில் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
SGRV என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான அந்த காணொளியில், இந்த சம்பவத்தை நம்மால் காண முடிந்தது.
டேஷ்கேம் வீடியோ அடிப்படையில், கடந்த ஏப்ரல் 14 அன்று காலை 6.18 மணிக்கு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், வாகன ஓட்டிகளுக்கு சாதகமாக பச்சை விளக்கு சிக்னல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காணொளியில், வேன் வேகமாக நெருங்கும்போது சில ஊழியர்கள் முன்னோக்கி நடந்து செல்வதையும், பின்னர் அவர்கள் விரைவாக பின்வாங்குவதையும் காணலாம்.
வேன் வருவதை உணர்ந்த மற்றொரு ஊழியர் முன்னோக்கி குதித்து தப்பித்து செல்வதையும் அதில் காணலாம்.
அந்தப் பதிவின்படி, ஊழியர்கள், எக்ஸான்மொபிலில் (ExxonMobil) வேலை செய்பவர்கள் என்று நம்பப்படுகிறது.
பதிவின் பின்னுட்டத்தில், சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாகச் செல்லுமாறு பேஸ்புக் பயனர் ஒருவர் கமெண்ட் செய்தார். மேலும், சாலைகளைக் கடக்கும்போது பாதசாரிகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் இன்னொருவர் கமெண்ட் வாயிலாக நினைவூட்டினார்.
2025ல் S Pass அனுமதியில் புதிதாக சிங்கப்பூர் வருபவரா / இங்கு வேலை செய்பவரா?

