Last Updated:
Summer Sports Training Camp| மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை 21 நாட்களுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தடகளம், கூடைப்பந்து, வอลிபால், பளுதூக்குதல், குத்துச்சண்டை, தேக்வாண்டோ போன்ற மாவட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள விளையாட்டுகளுக்கு பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மற்றும் போட்டிகள் குறித்தும், விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகளும், பயிற்றுநர்களால் முறையான பயிற்சியும், ஊட்டச்சத்துள்ள சிற்றுண்டியும் வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: அடேங்கப்பா… போஸ்ட் ஆபீஸ்ல ஆண் குழந்தைகளுக்கு இத்தனை சேமிப்பு திட்டங்களா?
எனவே மேற்காணும் பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பதினெட்டு வயதிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை 17.04.2025 முதல் அலுவலக வேலை நேரங்களில் காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பெயர்களை பதிவு செய்திட மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண் 7401703498, மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04322-222187 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 19, 2025 7:33 PM IST


