• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

3 பேருக்கு கத்திக்குத்து: விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 20, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
3 பேருக்கு கத்திக்குத்து: விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெலிஸ். குட்டி நாடான பெலிஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 4 லட்சம்தான். பெலிஸ் நாடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பெலிஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பெலிசில் இருந்து சிறிய ரக விமானத்தில் 14 பயணிகள் சான் பிட்ரோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த விமானத்தில் 14 பயணிகளுடன், 2 விமானிகள் இருந்தனர். நடு வானில் விமானம் பயணித்து கொண்டிருந்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்தியை எடுத்து பயணிகளை மிரட்டினார். அதோடு பயணிகளை தாக்கினார். இதில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் விமானத்தை கடத்த முயன்றார்.இதனால் விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பயணிகள் அனைவரும் பயந்துபோயினர்.அதேநேரத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமானத்தை கடத்திய நபரை சுட்டார். இதில், விமானத்தை கடத்த முயன்றவரின் உடலில் குண்டு பாய்ந்தது. பின்னர், விமானம் மீண்டும் பெலிஸ் நகரில் உள்ள பிலிப் எஸ்டபிள்யூ கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய அந்த நபர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,விமானத்தை கடத்த முயன்ற நபரின் பெயர் அகின்யிலா சா டெய்லர் (வயது 49) என்பதும் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடந்த வாரம் பெலிஸ் நகருக்கு வந்துள்ளார். அகின்யிலா சா டெய்லர் விமானத்தை கடத்த முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleஇந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா



Read More

Previous Post

ஐபிஎல் 2025: முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவு! பட்லர் அதிரடி..டெல்லிக்கு எதிராக வெற்றி.. டாப் இடத்துக்கு முன்னேறிய குஜராத்

Next Post

யாழில் அநாவசியமாக ஒட்டப்படும் தேர்தல் சுவரொட்டிகள் : மக்கள் விசனம்

Next Post
யாழில் அநாவசியமாக ஒட்டப்படும் தேர்தல் சுவரொட்டிகள் : மக்கள் விசனம்

யாழில் அநாவசியமாக ஒட்டப்படும் தேர்தல் சுவரொட்டிகள் : மக்கள் விசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin