பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்
கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபரான யுவராஜ் சிங் என்பவரின் மகன் பல்ராம் சிங், நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடையின் உரிமையாளரான கவிதாவின் மகள் கனிஷ்கா ஆகியோரிடையே கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மிகப்பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இருட்டுக்கடை அல்வா கடையின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு கடையின் நிர்வாகம் சார்பில் வாழ்த்தியவர்களுக்கும், வருகை தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

