சிரம்பான்:
சிரம்பானில் 2 மில்லியன் பிணைப் பணம் கேட்டு 16 வயது சிறுமி கடத்தப்பட்டது தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் இன்னும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 முதல் 31 வயதிலான அவர்கள் ஏப்ரல் 27 வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படுவார்கள் என நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அமாட் ஸாஃபிர் முகமட் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் நேற்று காலை கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் சுட்டுக் கொல்லபட்டதும் குறிப்பிடத்தக்கது.


