Last Updated:
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 29ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. நேற்று (14.04.2025) நடைபெற்ற இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஆறாவது ஓவரின்போது, கருண் நாயர் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என அதிரடியாக விளையாடினார். இதையடுத்து பும்ரா வீசிய பந்தில், கருண் நாயர் லெக் சைட் பந்தை அடித்து, 2 ரன்கள் ஓட முயன்றார். அப்போது பும்ராவை எதிர்பாராத விதமாக அவரை மோதினார். உடனே மன்னிப்பு கேட்கும் விதமாக தனது கையை உயர்த்தினார்.
ஆனால் இந்த சம்பவத்தையடுத்து ஜஸ்பிரித் பும்ரா எரிச்சலடைந்தார். பவர்பிளே முடிந்து, டைம்-அவுட் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது கருண் நாயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பும்ரா. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் பேசினார் கருண் நாயர்.
ஹர்திக் பாண்டியாவும் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டவாறு கருண் நாயரைத் தட்டிக்கொடுத்துச் சென்றார். ஆனால் இதில் ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் தான் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிக்கொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட் எடுத்த ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இதையும் படிக்க: பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் இல்லை.. சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் இந்த வீரர் தான்! – எப்போது இணைவார்?
இதுபோன்ற ஒரு வாக்குவாதம், இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது சர்ச்சை சம்பவமாகும். இதற்கு முன்னர் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே ஆஸ்திரேலிய வீரர்கள் க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஒரு வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
April 14, 2025 11:11 AM IST
DC vs MI | ஜஸ்பிரீத் பும்ரா – கருண் நாயர் இடையே முற்றிய வாக்குவாதம்..! மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியில் சலசலப்பு..!


