சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit) வேலை அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்கள் இனி நீண்ட காலம் தங்கி வேலை செய்யலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள விதிமுறையின்படி; இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த ஒர்க் பெர்மிட் ஊழியர்கள் 14 முதல் 26 ஆண்டுகள் வரை இங்கு பணிபுரியலாம்.
ஜூலை 1ஆம் தேதி முதல்
இந்நிலையில், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வரம்பு நீக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அறிவித்தார். இந்த புதிய மாற்றம் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களே சம்பளம் சரியாக வரவில்லையா? – உங்களுக்கான ஒரே தீர்வு
வெளிநாட்டு ஊழியர்களின் ஓய்வு வயது
நல்ல திறமையான அனுபவமிக்க வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ள இந்த புதிய மாற்றம் வழிவகை செய்யும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை ஒத்து இது அமைந்துள்ளது. அதாவது Work Permit ஊழியர்களுக்கும் ஓய்வுபெறும் வயது 60-லிருந்து 63 ஆக உயர்த்தப்படும். இதன் படி, நிறுவனங்கள் Work Permit அனுமதி வைத்திருப்பவர்களை 63 வயது வரை வேலைக்கு பணியமர்த்தலாம்.
புதிய Work Permit அனுமதி விண்ணப்பங்களுக்கான வயது வரம்பு
மேலும், புதிய Work Permit அனுமதி விண்ணப்பங்களுக்கான வயது வரம்பு 61 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போதய விதிமுறையின்படி, இந்தியா உள்ளிட்ட பிற நாட்டை சேர்ந்த ஒர்க் பெர்மிட் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 50 என்றும், மலேசிய விண்ணப்பதாரர்களுக்கு 58 என்ற வயது வரம்பும் உள்ளது.
The post ஒர்க் பெர்மிட் அனுமதியில் சிறப்பான மாற்றம் – ஜூலை முதல் அமல்; வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சி appeared first on Tamil Daily Singapore.

