Last Updated:
நிகோலஸ் பூரன் அடித்த சிக்ஸர், பார்வையாளர் ஒருவரின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.
நிகோலஸ் பூரன் அடித்த சிக்ஸர் பார்வையாளர் ஒருவரின் தலையை பதம் பார்த்தது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடந்த டி20 போட்டியில் நிகோலஸ் பூரன் அடித்த சிக்ஸர் பார்வையாளர் ஒருவரின் தலையை பதம் பார்த்தது.
லக்னோ-குஜராத் அணிகள் மோதிய 26ஆவது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. 181 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி, நிகோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தில் எளிதாக வென்றது.
இந்த சேசிங்கின்போது, பூரன் அடித்த பந்து, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவரின் நெற்றியில் பட்டு ரத்தம் தெறித்தது. உடனே அந்த ரசிகருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
लखनऊ के इकाना स्टेडियम में पूरन ने ऐसा छक्का मारा जो गेंद सीधे दर्शक के सिर पर जाकर लगी और बंदा घायल हो गया। उसका सिर पूरा फूट गया और लहूलुहान हो गया, लेकिन बंदा दोबारा मैच देखने से बाज नहीं आया.. #LSGvGT #NicholasPooran pic.twitter.com/6we7QynpiE
— Gaurav Pandey (@gaurav5pandey) April 13, 2025
தலையில் காயமடைந்து ரத்தம் சொட்டிய நிலையிலும் அந்த ரசிகர் மீண்டும் மைதானத்துக்கு செல்ல வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார். “யாருப்பா இவரு மொரட்டு கிரிக்கெட் ரசிகரா இருக்காரே” என்று மக்கள் இவரை வியப்புடன் பார்த்தனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 13, 2025 8:35 PM IST


