பாஜக மாநிலத் தலைவராக தேர்வாகி உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ், துண்டு, பிரசாதம் ஆகியவற்றை கிஷண் ரெட்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். எல்.முருகன், தமிழிசை சௌந்தராஜன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், ஏ.ஜி.சம்பத் ஆகியோருக்கும் தேசிய பொதுக்குழுவில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

