• Login
Thursday, April 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா இன்று ஆஜர்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | Tahawwur Rana’s likely appearance Security tightened outside Patiala Court

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா இன்று ஆஜர்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | Tahawwur Rana’s likely appearance Security tightened outside Patiala Court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் முன்பு துணை ராணுவப்படையினர் மற்றும் டெல்லி போலீஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் நீதிமன்றத்துக்கு வரும் பார்வையாளர்கள் முழு சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ராணா தொடர்பான விவகாரத்தை என்ஐஏ நீதிபதி விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தஹாவூர் ராணாவை உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த ராணா, அந்நாட்டு ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார். 1997-ல் அதிலிருந்து விலகி, மனைவியுடன் கனடாவில் குடியேறினார். இருவருக்கும் 2001-ல் கனடா குடியுரிமை கிடைத்தது. பின்னர் சிகாகோவில் குடியேறிய அவர், குடியுரிமை சேவை நிறுவனத்தை தொடங்கினார்.

தனது சிறுவயது நண்பரான டேவிட் ஹெட்லியுடன் இணைந்து தீவிரவாத செயலில் ஈடுபடத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக ராணா மும்பையில் தங்கி, தாக்குதலுக்கு நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க்கின் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த ராணா திட்டமிட்டிருந்தார். ஆனால் அது முறியடிக்கப்பட்டது.

கூடுதல் தகவலுக்கு வாசிக்க > மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!



Read More

Previous Post

அமெரிக்க வரி சவால்;சர்வ கட்சி குழு அமைக்க ஜனாதிபதி உறுதி

Next Post

ருதுராஜ் விலகல்: சிஎஸ்கே கேப்டனாகும் தோனி! | ruturaj gaikwad ruled out of ipl 2025 over injury dhoni to lead csk

Next Post
ருதுராஜ் விலகல்: சிஎஸ்கே கேப்டனாகும் தோனி! | ruturaj gaikwad ruled out of ipl 2025 over injury dhoni to lead csk

ருதுராஜ் விலகல்: சிஎஸ்கே கேப்டனாகும் தோனி! | ruturaj gaikwad ruled out of ipl 2025 over injury dhoni to lead csk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin