மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.400க்கும், பிச்சி ரூ.1000க்கும், சம்பங்கி ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: Good Bad Ugly Review: குட் பேட் அக்லி எப்படியிருக்கு… படத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்…
அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.2500க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1000க்கும், அரளிப்பூ கிலோ ரூ.800க்கும், வாடாமல்லி கிலோ ரூ.80க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.250க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1500க்கும், ரோஸ் கிலோ ரூ.300க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.400க்கும், துளசி கிலோ ரூ.50க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.5க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.80க்கும், செவ்வந்தி கிலோ ரூ.450க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து தோவாளை மலர் சந்தையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “விசேஷ நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரிக்கும். நாளை பங்குனி உத்திர விழா கோவில்களில் விமரிசையாக நடைபெற இருப்பதாலும், பூக்களின் தேவை அதிகரிப்பாலும் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை மற்றும் விலை அதிகரித்துள்ளது. பூக்கள் விலை அதிகரித்தாலும் பூ வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு ஆர்வமுடன் பூ வாங்கி செல்கின்றனர்” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Kanniyakumari,Tamil Nadu
April 10, 2025 4:07 PM IST

