• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சம்பளக் குறைப்பு மூலம் ரிம 500,000 வசூலிக்கச் சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
சம்பளக் குறைப்பு மூலம் ரிம 500,000 வசூலிக்கச் சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையைக் காட்டும் விதமாக, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.

சிலாங்கூர் பிரிஹாதின் நிதிக்காகக்(Selangor Prihatin Fund) குறைந்தபட்சம் ரிம 500,000 திரட்டுவதே இலக்காகும்.

“இந்த நோக்கத்திற்காக, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து ரிம 1,000 பங்களிப்பார்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் ரிம 200 பங்களிப்பார்கள், க்ரெட் 48 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ரிம 50 பங்களிப்பார்கள், இது மாநில அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட மீட்பு செயல்முறைக்கு உதவப் பயன்படுத்தப்படும்,” என்று பெர்னாமா அவரை மேற்கோள் காட்டி கூறினார்.

அறிக்கையின்படி, 270 வீடுகள் பாதுகாப்பாகவும், குடியிருப்பதற்குத் தயாராகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார். மேலும், வீட்டு உரிமையாளர்கள் உடனடியாகச் சிறிய பழுதுபார்ப்புகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட வீடுகளை மீட்பது குறித்து விவாதிக்க மாநில அரசு திங்கள்கிழமை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்துடன் கலந்துரையாடல் நடத்தும்.

“சிறிய பிரச்சினைகளுள்ள வீடுகளுக்கு, பழுதுபார்க்கும் செயல்முறையை நாங்கள் தீர்மானிப்போம்”.

“சேதம் குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டால், அவர்களுக்கு ஒரு நிலையான பங்களிப்பு வழங்கப்படும், இது மீட்புக் குழுவால் செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

1000 தன்னார்வலர்கள்

கூடுதலாக, இந்த வார இறுதியில் சுமார் 1,000 தன்னார்வலர்களின் ஆதரவுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

ஏப்ரல் 2 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 219 வீடுகள் சேதமடைந்ததாக ஏப்ரல் 6 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 469 குடும்பத் தலைவர்களில் 219 பேர் ஏப்ரல் 1 ஆம் தேதி பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த உடனடி உதவியைப் பெற்றுள்ளதாக அமிருடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபர்களின் சரிபார்ப்பை பெட்டாலிங் மாவட்ட அலுவலகம் இன்னும் உறுதி செய்து வருகிறது, மேலும் இந்தச் செயல்முறை இந்த வெள்ளிக்கிழமைக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டுவசதி விருப்பங்கள்

தேவான் கேமிலியாவில் உள்ள தற்காலிக வெளியேற்ற மையத்தைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தங்க வைக்கப் பயன்படுத்தப்பட்ட பின்னர், இன்று இரவு 10 மணிக்கு அது மூடப்படும் என்று அமிருடின் கூறினார்.

இது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவியின் காரணமாகும், பல குடும்பங்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டன.

“மாநில அரசு Airbnb மற்றும் வாடகை வீடு உதவி போன்ற வீட்டு வசதிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. தற்காலிக வெளியேற்ற மையத்திலிருந்து குடியிருப்பாளர்களை வழங்கப்படும் பிரிவுகளுக்கு மாற்றும் செயல்முறை தொடங்கியுள்ளது”.

“தற்போது 87 குடும்பங்களைத் தங்க வைத்திருக்கும் மஸ்ஜித் புத்ரா ஹைட்ஸ் தற்காலிக வெளியேற்ற மையத்தின் செயல்பாடுகள் இந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் சிலாங்கூர் மாநில செயலக கட்டிடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சிலாங்கூர் இஸ்லாமிய மத கவுன்சில் குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கும் என்றும், அவை ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அமிருதீன் மேலும் கூறினார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

Personal loan | பர்சனல் லோனுக்கு உடனடி அப்ரூவல் செய்ய இந்த டிப்ஸ் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்…! என்ன தெரியுமா…?

Next Post

சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; மனைவி கழுத்தில் 5 பவுன் சங்கிலி பறிப்பு – பட்டப்பகலில் மர்ம கும்பல் துணிகரம்

Next Post
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; மனைவி கழுத்தில் 5 பவுன் சங்கிலி பறிப்பு – பட்டப்பகலில் மர்ம கும்பல் துணிகரம்

சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; மனைவி கழுத்தில் 5 பவுன் சங்கிலி பறிப்பு - பட்டப்பகலில் மர்ம கும்பல் துணிகரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin