சிங்கப்பூரில் புதிதாக 15 பேருந்து சேவைகள் அறிமுகம் ஆகவுள்ளதாக நிலப்போக்குவரத்து ஆணையம் (LTA) குறிப்பிட்டுள்ளது.
அந்த புதிய பேருந்துகள், தெம்பனீஸ் நார்த் (Tampines north) மற்றும் தெம்பனீஸ் சவுத் (Tampines south) ஆகிய பகுதிகளை ஒன்றிணைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் LTA வெளியிட்டுள்ளது.
அதோடு சேர்த்து Whampoa மற்றும் Novena வட்டார பகுதிகளையும் அந்த புதிய பேருந்துகள் இணைக்கும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சுமார் 11 பேருந்து சேவைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அவைகள் உட்லண்ட்ஸ், பொங்கோல் மற்றும் தெங்கா ஆகிய பகுதிகளை ஒன்றிணைக்கின்றன.
புதிய பேருந்துச் சேவை எண் 299 இந்த மாதம் 27 ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அது தெம்பனீஸ் நார்த் பேருந்து முனையம் மற்றும் தெம்பனீஸ் சவுத் ஆகிய பகுதிகளை இணைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து 21X பேருந்து சேவையும் அறிமுகம் செய்யப்படும் என்பது கூடுதல் தகவல்.
அதிக பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், பயணிகள் இலகுவாக பயணிக்க முடியும் என்றும், காத்திருப்பு நேரம் குறையலாம் என்ற கருத்தும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது.

